28 November 2009

நைட் ஷிப்டில் நாத்திகம்

வணக்கம் மக்களே...

தயவு செய்து என்னை மன்னிக்கவும். என்னுடைய அடுத்த கட்டுரை எனது நண்பர்களுக்காக நண்பர்களை பற்றியதாக இருக்க வேண்டுமெனக் கருதினேன். ஆனால் அதற்குள் எனக்குள் இருக்கும் night shift நினைவுகள் மறைந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாக அவசர அவசரமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.


கடந்த கட்டுரைக்கு தங்களது விலைமதிப்பற்ற கருத்துக்களை தந்த pon mahesh, tyagu மற்றும் சில நண்பர்களுக்கு கோடி நன்றிகள். இந்த முறையும்உங்கள் மேலான ஆதரவையும் பொன்னான கருத்துக்களையும் கொடுக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.
இனி உள்ளே...

september மாதம்... மார்கழி மாதத்தை மன்மத மாதம் என்று சொல்வதுபோல என்னைப்பொறுத்தவரையில் september மாதம் நாத்திக மாதம். இது தந்தைபெரியார் பிறந்த மாதம். இதே மாதத்தில் தான் நானும் பிறந்தேன். ஆனால் நானொரு சிறியார் தான். சில மாதங்கள் முன்பு வரை நான் சிலகாரணங்களுக்காக எனக்குள் நாத்திகத்தை (மன்னிக்கவும்... பகுத்தறிவை) மறைத்து வைத்துக்கொண்டு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திகோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்து வந்தது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது நான் மீண்டும் நானாக...

september 3 2009 - முதன்முறையாக night shift வேலைக்கு கிளம்பினேன். எங்களது batchல் உள்ள trouser boys சிலரும் seniors 8 பேர் மட்டுமே அணியில்இருந்ததால் நான் தனித்தீவாகவே இருந்தேன். சில நாட்கள் வரை seniors அந்நியர்களாகவும் team leader நண்பராகவும் தெரிந்தது. ஆனால் ஓரிருநாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. நானும் பாலும் தயங்கிதயங்கி seniors கூட்டணியில் இணைந்தோம். பின்னர் paul விஷனின் நக்கல்ஸ் தாங்க முடியாமல் கூட்டணியில் இருந்து விலகி மலையாளக்கரையோரம் ஒதுங்கினான்.
இனி நானும் சீனியர்சும்...

seniors என்பதால் சில காலம் வரை அணியில் ஊமையாக மட்டுமே இருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி டீக்கடையில் meeting போடுமளவிற்கு ஒன்றுகூடினோம். ஆனால் அவர்கள் முன்னிலையில் புகை நமக்கு பகை என்றே காட்டிக்கொண்டேன். தினமும் பின்னிரவில் யாருக்கும்தெரியாமல் smoking loungeல் ஒளிந்து ஒளிந்து புகைத்துவிட்டு வருவேன்.

night shift என்பதால் நாங்கள் தூங்கிக்கொண்டோ மந்தமாகவோஇருந்ததில்லை. எப்போதும் அரட்டை தான். இதில் wanted fellows - saravanan and vishan. sense of humourல் சரவணன் வடிவேலுவைப் போலவும் விஷன்விவேக்கை போலவும் செயல்படுவார்கள். சரவணன் அவ்வப்போது உள்ளே புகுந்து வடிவேலு வசனங்களை சொல்லி சிரிக்க வைப்பார். விஷனின் பேச்சு வித்தியாசமானது. அதில் நகைச்சுவையை விட சமூகக்கருத்துகள் அதிகம் அடங்கியிருக்கும்.

காலம் உருண்டோட அவர்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர். அவர்களுக்கருகில் login செய்வதையே விரும்புவேன். sunday அவர்கள்இருவருக்கும் OFF என்பதால் அன்று அலுவலகம் செல்வதையே வெறுப்பேன். குறிப்பாக விஷன் என்னை அதிகம் கவர்ந்தார். அவருக்குள் இருக்கும் நெருப்பை நான் சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.

vishan - அவரை vision என்று கூட சொல்லலாம். பெரியார்த்தொண்டர், அதற்கும் மேலாக கமல் பக்தர். விஷனின் பேச்சை கேட்பதற்காகவே தினமும் அலுவலகம் சென்றேன். கமல் படங்களின் வசனங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு அவ்வப்போது timing comedy அடிப்பார். (இந்த கட்டுரையை எழுதும் இந்த நாளில் vision பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதை மன மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்)

இப்படியாக அரட்டை அரங்கம் போல செயல்பட்டு வந்த night shift, team leader சுரேஷின் அக்கப்போரால் சலனமடைந்தது. இதன் காரணமாக
மாதக்கடைசியில் pilot batch உறுப்பினர்கள் சிலர் பணியை துறக்க முடிவு செய்தனர். இதை ஒரு பிரிவு உபசார தினமாக கடைபிடிக்க திட்டமிட்டோம். october 7 மாலை t.nagar eagle barல் farewell நடத்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த ஓராண்டுகாலமாக மதுவின் பிடியில் இருந்த நான் இப்போது மதுவை
நாட முடிவு செய்தேன் (பொருள் வேற்றுமையை உணர்ந்து கொள்க). நாங்கள் barல் cheers சொன்னபோது எனக்குள் இருந்த senior - junior வேற்றுமை தொலைந்தது. முதன்முறையாக அவர்கள் முன்னிலையில் புகை பிடித்தேன். உற்சாகம் பொங்கி 5 round தாண்டியபின் அங்கே என்ன நடந்ததென்றே நினைவில்லை. (இந்த இடத்தில் அன்றிரவு என்னை பாதுக்காப்பாக அழைத்துச் சென்ற நண்பர்கள் pon mahesh, ashokக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்).

சரிபாதி seniors கழண்டுகொள்ள vignesh, velan, vivek ஆகியோரை எங்கள்
கூட்டணியில் இணைத்துக்கொண்டோம். எப்படி கூட்டணி கலைந்து மாறினாலும் விஷன் தான் center of attraction. team leader சுரேஷ் அவ்வப்போது எங்கள் கூட்டணிக்கு அலப்பரைகள் கொடுத்ததால் team manager தலைமையில் பஞ்சாயத்தை கூட்டினோம். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சட்டம் அவரை தண்டிக்கவில்லை.

இத்தகைய கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் காரணமாக manager எங்களை day shift
க்கு மாற்ற திட்டம் வகுத்தார். november 1 முதல் day shift என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. night shiftஐ பிரிவதற்கு வருத்தமாக இருந்தாலும் day shiftல் பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று தெரிந்ததும், காய்ந்த மாடுகளாக கம்பங்கொல்லையை மேய தயாரானோம்.

அடுத்த கட்டுரை நிச்சயமாக கண்டிப்பாக எனது நெருங்கிய பள்ளி, கல்லூரி
நண்பர்களை பற்றியது. அதற்கான முன்னோட்டம் தான் தற்போதைய polls.

தலைப்பு: எனக்கான பரமனைத் தேடி...!


என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

17 comments:

Sujai Narendar said...

Super da.........
i like d way u narrated..............
congrats!!!!!!!!!!!!!!!!!

Unknown said...

machi epdida unnala mattum idhellam mudiyudhu???super da..

Ramalingam said...

How do u wrote like this da.........super. but dont drink much.

Ragav said...

your writing skills was superb............go ahead
Congrats..........

pshychic pshychartist said...

so finalyy bcom a gd alcoholist!!!
anyway ill frgt my past wt u fr ds developement buddy....

deva said...

Superbb da.. Realy you have great future...

Dinesh said...

dai hw can u write it da.......its amazing one.......u,ve bright oppourtunity to become journalist.........................

Philosophy Prabhakaran said...

@all
Thank u very much for ur valuable conmments...

Preethi said...

It was nice one.... all the best fr the upcoming essays

Ponmahes said...

hi da

Ponmahes said...

thambi keep it up da.........i wish u all the best for your journey...........

pavi said...

good work continue da...

Unknown said...

dis s siddharth, ramesh, vidya...........
ur skills r simply superb...
particularly the difference between MADHU & MADHU(Drinks).......r so nice...
keep rocking ......

so welcome to WINE SHOP.....
KUDIMAGNAEEEEEEEEEE

Unknown said...

nan solli thantha mathiriye yeluthiyirukka....paravala polachipa....

Anonymous said...

good

சீனு said...

பிரபா அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் எழுத்துக்களில் அட்டகாசமான மாற்றம்.. செம...

Ponmahes said...

>>ஆனால் இப்போது நான் மீண்டும் நானாக...

என்ன பிக் பாஸ் வீட்ல இருக்கியா தம்பி??????


>>கடந்த ஓராண்டுகாலமாக மதுவின் பிடியில் இருந்த நான் இப்போது மதுவை நாட முடிவு >>செய்தேன் (பொருள் வேற்றுமையை உணர்ந்து கொள்க).


ஓம் சக்தி பராசக்தி !!!!!!!!!!!!

>>(இந்த இடத்தில் அன்றிரவு என்னை பாதுக்காப்பாக அழைத்துச் சென்ற நண்பர்கள் pon >>mahesh, ashokக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்).

ஓ அது அன்னைக்கு தானா !!!!!!!??

அருமையான narration .....வாழ்த்துக்கள் தம்பி ....