12 March 2010

சுரேஷுக்கு ஒரு கடிதம்

வணக்கம் மக்களே...

(தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, கோவா படத்தை விமர்சிப்பது, சங்கராச்சாரியை கிழிப்பது, பட்டாம்பூச்சியின் அடுத்த பாகத்தை பறக்க விடுவது இவற்றிற்கெல்லாம் முன்னதாக முக்கியமான ஒரு பதிவை எழுதி ஆகவேண்டிய சூழ்நிலை. இது முழுக்க முழுக்க ஒரு personal பதிவு. படிக்க விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம்.)
அன்புள்ள சுரேஷுக்கு,

தங்களது குறுந்தகவலை எனது இன்பாக்ஸில் பார்த்த நொடியில் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே அச்சுப்பிசகாமல் பதிவு செய்கிறேன்.

முதலாவதாக எனது வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கும் பின்னூட்டம் பதிவு செய்ததற்கும் நன்றிகள்.

சில மாதங்களுக்கு முன்னால் நான் எழுதிய நைட் ஷிப்ட் கட்டுரையில் உங்கள் அனுமதியின்றி உங்களைப் பற்றி சில வரிகள் எழுதியிருந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அந்தக் கட்டுரையில் இன்னும் காட்டமாக எனது கோபத்தை சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் எனது வலைப்பூ அலுவலகத்தில் பரவ ஆரம்பித்த அடுத்த நாளே கட்டுரையில் இருந்த சில வரிகளை நாகரிகமாக நீக்கிவிட்டேன். இருப்பினும் கட்டுரையில் இருந்த சில வரிகள் உங்களை காயப்படுத்தி இருக்கலாம். அதற்காக நான் மனமார வருந்துகிறேன்.

கட்டுரையை படித்தபின்பு நீங்கள் என்னை கண்டித்திருந்தாலோ, வேறு விதமாக செயல்பட்டிருந்தாலோ சத்தியமாக நான் அதற்காக துளியும் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். but the way u behaved is quite different. This is what Thiruvalluvar said,
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்"
நீங்கள் அனுப்பிய குருந்தகவலைப் படித்தபோது உண்மையில் நான் மனம் வருந்தினேன்.

கட்டுரையில் நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய எண்ணங்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. அதுதான் சரி என்றோ, நடந்தது இதுதான் என்றோ நான் கூறவில்லை. ஆனாலும் கலகலவென சுற்றித்திரிந்த சரவணனை கல்லாக மாற்றிய சம்பவம் எது என்பது உங்களுக்கும் நினைவிருக்கலாம்.

even விஷனும் நானும் கூட நைட் ஷிப்டில் இருக்கும்போது உங்களிடம் முரண்பட்டே இருந்தோம். விஷனுக்கும் எனக்கும் இருக்கும் உணர்வு ஒற்றுமையை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் விஷன் பக்கத்தில்தான் login செய்வேன் என்று அடம் பிடித்ததெல்லாம் இதற்காகத்தான்.

இதுவரை நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் நைட் ஷிப்டில் நடந்து முடிந்தவை. இனி எழுதப்போகும் வரிகள் அனைத்தும் சில வாரங்களுக்கு முன்பு நான் அக்பர் அணிக்கு மாற்றப்பட்டபோது எழுத நினைத்த வரிகள்.

ஒரு காலத்தில் எப்படியாவது இந்த அணியை விட்டு வெளியேறினால் போதுமென நினைத்திருக்கிறேன். ஆனால் நான் அக்பர் அணிக்கு மாற்றப்பட்டபோது நான் இருந்த மனநிலை எனக்கு மட்டும்தான் தெரியும். ஆர்.சதீஷை பார்த்து பொறாமை பட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நிரஞ்ச் உங்களைத் திட்டும்போதும், நாங்கள் செய்த தவறுகளுக்காக உங்களுக்கு அனுப்பப்படும் மெயில்களை பார்த்தபோதும் உங்களது point of viewல் இருந்து சில உண்மைகளை உணர்ந்துக்கொண்டேன்.

தளத்திலேயே உங்களைப் போல சிறப்பாக பணியாற்றக்கூடிய அணித்தலைவர் யாரும் கிடையாது. Here i like to use the word "dedication". எந்த ஒரு அணியும் நமது அணியைப் போல systematicக்காக இருந்ததில்லை. நான் உங்களுடன் இருந்த மனக்கசப்புகளை மறந்து எப்போதோ உங்களுடன் இணைந்து எனக்காகவும் அணிக்காகவும் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். இதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள். உணரவில்லை என்றால் இப்போது உணர்ந்துக்கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். sincerity, dedication, punctuality, politeness இதுபோன்ற பல வார்த்தைகளுக்கான அகராதியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.

என் வாழ்வில் என்றைக்குமே நான் உங்களைப் போல ஒரு மாமனிதரை மறக்கமாட்டேன். U R A GREAT PERSONALITY. IM ADMIRING U.

என்னுடைய கருத்துக்கும் மதிப்பளித்து இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி. இது மட்டுமல்லாமல் நான் எழுதிய, எழுதும் சமூகப்பதிவுகளையும் நீங்கள் படித்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.

(பி.கு.: எனக்கு சொம்படித்து பழக்கமில்லை. சொம்படிக்கவும் தெரியாது. நான் எனது மனதில் தோன்றிய கருத்துக்களை மட்டுமே எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன்.)
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

2 comments:

Anonymous said...

Hi Prabha,
Please don't take it very serious. You have the right to express your thoughts at any time and in any medium. I have no concern even if you would have not erased the one, which you had before( as written in suresh-ku or kaditham). I am very proud to have such a person's relationship in my life. I could see interesting things in your blog, which would create an awareness in the society. my suggestion: Please also make this blog useful in such a way, to have more readerships by having some topics like amazing facts(history),sports,politics included. Continue doing it. No circumstances or situation can split us. I saw your dedication and willingness, you showed in the work when you were in my team. If we have a better understanding no obstacles can divide our friendship. Thanks a lot! - Suresh

Anonymous said...

Superp... Continue your fantastic Job... Niranj